பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - வத்ளல8லயின்

பார்த்திருப்பேன். அவளும் என்னே அடிக்கடி பார்ப்பதும், பிறகு லஜ்ஜையுடன் தலையைக் குனிந்து கொள்ளுவதுமாக இருக்தாள். நடுநிசி சம்பவத்தை கினைத்தே அவள் அவ்வாறு லஜ்ஜைப் பட்டிருக்க வேண்டும். -

அப்புறம் பொழுது, சாய்வதற்குள் அந்த தம் பதிகளைப் பலமுறை சந்தித்தேன். கப்பல் ஒட்டலில் நான் உட்கார்ந்து சாப்பிட்ட ம்ேஜைக்கு எதிர் ம்ேஜையில் தான் அவர்களும் சாப்பிட்டார்கள். இம்மாதிரி இரண்டு வேளைச் சாப்பாட்டின்போதும் ஏற்பட்ட சந்திப்பின் காரணமாக அவர்களுடன் நெருங்கிப் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் மீட்டும் என்னைப் பார்த்த போதெல்லாம் புன் சிரிப்புச் சிரித்து என் சினேகத்தை விரும்புவதாகக் காட்டிக் கொண்டான். நான் தமிழ் பேசுபவன் என்பதை எப்படியோ அறிந்துகொண்டு, கன் மனே வியிடம் நான் பேசவேண்டும் என்று விரும்பின்ை. ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. நாங்களாகவே விரும்பிய காரியத்தை அவனும் விரும்பி செய்யச் சொன்னது பழம் கழுவிப் பாலில் விழுந்த கதையா யிற்று! அப்புறம் கேட்பானேன்? அவளும் நானும் அடிக்கடி சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். அதுமுதல் அவள் தன்னுடையபூர்வோத்சாங்களேச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொண்டு வந்தாள். அவள் கூறிய விவரத்திலிருந்து அவள் பெயர்