பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ3 . | . . . விண்

டும்; தெரியுமா? அந்த வீட்டில் பிசாசு இருக்கிற காம் என்று பயமுறுத்தி வைத்திருந்தாள். அது முதல் பத்மா பிசாசுக்குப் பயந்து கொண்டு மஞ்சள் வெயில் மறையு முன்பே வீட்டுக்குத் திரும்பி வந்து விடுவாள். .

இப்படி இருக்கும் போது திடீரென்று அந்தப் பிசாசு இருக்கிற இடத்துக்கு யாரோ இளம் தம்பதிகள் குடி வந்த விஷயம் பத்மாவின் களங்க மற்ற இளம் மனதை என்னமோ செய்து கொண்டி ருந்தது. -

亲” 亲。 荣 来

ideos ஒன்பது அடித்து வெகு நேரம் வரை பத்மா வின் சகோதரிகளுக்கு இருப்புக் கொள்ளவே இல்லை. ஜன்னலை விட்டு காாமல் எதிர் வீட்டு விவ காரங்களையே சினிமா பார்ப்பது போல் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெகு காளாய் அந்தகாரத்தில் கிடந்த அந்த வீடு இன்று மின்சார வெளிச்சத்தில்ை பிரகாசமாய்க் காட்சி அளித்த்து. வாசல் ஜன்னல்கள் இேரண்டும் திர்ை போட்டு மூடியிருந்ததால் தம்பதிகளின் நடவடிக்கை களைச் சரியர்கக் கவனிக்க முடியவில்ல்ை. இருந்தா லும் மெல்லிய திரைக்குப் பின்னல் அவ்விருவரு டைய கிழல் அடிக்கடி தென்பட்ட்ன். அதற்கு மேல் சகோதரிகளால் ஒன்றும் கவனிக்க முடியவில்லை.

மறுநாள் சகோதரிகள் பொழுது புலர்வதற். குள்ளாக எழுந்திருந்து எதிர் வீட்டை கவனிக்க