பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - வின்

புடவைகளைக் கொண்டு போய் உலர்த்துவான். அக்கம்பக்கத்திலிருந்து யாராவது கவனிப்பார்) களே என்ற சங்கோசமில்லாமல் துடைப்பத்தை. வைத்துக்கொண்டு வாசல் வராத்தாவைப் பெருக்கு. வான். விறகுக் கட்டைகளை ஏதோ புஷ்பங்களே வாரிச் செல்வது போல் நினைத்துக் கொண்டு. பெருமையோடு எடுத்துப் போவான்.

சகோதரிகளுடைய ஆச்சரியத்துக்கு இதெல் லாம் மேலும் மேலும் உரம் போட்டது போல் இருந் தது. அந்த யுவதி வாசல் பக்கம் வருவாளா, அல்: லது ஜன்னல் பக்கமாவது வந்து எட்டிப் பார்ப் பாளா என்று சதா எதிர்வீட்டை கவனிப்பதிலேயே அவர்கள் பொழுதை வீணுக்கினர்கள். ஊரிலிருந்து வந்த அன்று காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றவளே அப்புறம் கண்ணுல் காண்பதே அரி தாகி விட்டது. இதில் ஏதேனும் இரகசியம் இருக். குமோ? எல்லாம் ஒரே மூடு மந்திரமாக இருக்கிறதே. என்று சகோதரிகளும் அவர்களுடைய தாயாரும். வியந்தனர். தங்கள் வீட்டுக்குப் பால் கொடுக்கும். அதே பால்காரிதான் அவர்களுடைய வீட்டுக்கும், வாடிக்கை வைத்துக் கொண்டிருந்தாள். எனவே, சகோதரிகள் பால்காரி மூலம் விவரம் அறிய முயற்சி தொடங்கினர். பால்காரிக்கும் ஏற்கெனவே அவர் களேப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை யிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த யுவதியின் வாயிலிருந்து வார்த்தைகளே. வரவழைக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள். -