பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் · 8 ↑

கட்டைப் பிரித்துப் பார்த்தபோது வாலிபன் சொன்னபடி காயம், அடி ஒன்றையுமே காணுேம். "எங்கே வலிக்கிறது?’ என்று கேட்டார் டாக்டர்.

'மணிக்கட்டுக்கு மேலே என்று சொல்லி இடது கை ஆள் காட்டி விரலால் வலிக்கும் இடத் தைச் சுட்டிக் காட்டினன். . .

டாக்டர் அழுத்திப் பார்த்தார். வாலிபன் "ஐயோ!' என்று அலறின்ை. 'ஒன்றும் தெரியவில்லையே; இடது கையைப் போலத்தானே இருக்கிறது? நரம்பிலும் கோளாறு இல்லை' என்று சொல்லிவிட்டு டெம்பரேசரைப் பார்த்தார். நார்மலில்தான் இருந்தது.

ஆல்ை, வாலிபன் மட்டும் துடித்துக் கொண்டி ருக்தான். -

அருங்குணம், பையனுக்கு மூளைக் கோளாறு ஏதாவது இருக்குமோ என்று சந்தேகித்தார்.

இதற்குள் வாலிபன், ஸார் என்னைப் பைக் தியக்காரன் என்று எண்ணுதிர்கள். என்னுல் வாஸ்தவமாகவே வலியைப் பொறுக்க முடியவில்லை. எனக்கு வலி இருப்பது உண்மைதான். சட்டென்று ஆபரேஷன் செய்துவிடுங்கள் டாக்டர்' என்று பல்லேக் கடித்துக் கொண்டு குமுறின்ை.

'வியாதி இன்னதென்று பிடிபடாமல் ஆபரே' ஷன் செய்தால் என்னே யாராவது பைத்தியம் என்று சொல்லுவார்கள், தயவு செய்து தாங்கள்: போய் வாருங்கள்!” என்று கூறினர் டாக்டர்.