பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.Ꭶ 2 - . . . . . சகசியக்

வாலிபன் சட்டைப் பையிலிருந்து பச்சை கோட்டுகளாக ஐந்து நூறு ரூபாய் கோட்டுக்களே எடுத்து டாக்டரிடம் நீட்டினன். -

அவன் அந்த இடத்தை விட்டுப் போவதா யிருந்தால் டாக்டரே அவனுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். வாலிபன் விடுவதாயில்லை. அருங்குணம் வேறு வழியின்றி அவன் சொன்ன இடத்தில் ஆபரேஷ்ன் செய்து முடித்தார்.

"இப் போது வலி எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். -

வாலிபன் போன உயிர் திரும்பி வந்ததுபோல் முகமலர்ச்சியுடன், வலி அடியோடுபோய்விட்டது, டாக்டர்' என்ருன். டாக்டரால் நம்ப முடியவில்லை. இந்த மாதிரி அபூர்வக் கேஸை அவர் தமது ஆயு வில் பார்த்ததில்லை. -

米 采 赛

ஒரு வாரம்ல்சென்றது. மறுபடியும் அந்த வாலிபன் டாக்டரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தான். , 'இப்போது எப்படி இருக்கிறது, வலி?’ என்று. கேட்டார் டாக்டர்.

'மறுபடியும் அதே இடத்தில் முன்னேவிட அதிகமாய் வலிக்கிறது. எனவே, இப்போது தாங்: கள் செய்ய வேண்டியது இன்னெகு. ஆபரேஷன் தான். முன் தடவை மேலோடு செய்து விட்டீர்'