பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வனதேவியின் மைந்தர்கள்

குட்டையாகக் கறுத்து குறுகிய சத்திய முனி... முடிமழித்த கோலம் இடையில் வெறும் கச்சை முடியில் நார்ப்பாகை சுற்றியிருக்கிறார்.

பூமகள் குடுவையில் நீர் கொணர்ந்து வந்து அவர்களுடைய பாதங்களைக் கழுவி, ஆசி பெறுகிறாள். அவர்கள் உள்ளே பெரிய கொட்டகைக்கு வருகிறார்கள். பெரியன்னையினால் எழுந்திருக்க முடியவில்லை. சத்தியமுனியும், நந்தமுனியும் அவள் பாதங்களில் பணிந்து வணங்குகின்றனர்.

“தாயே, நிலமாக இருக்கிறீர்களா?”

“இருக்கிறேன் சாமி, இது எனக்கு இன்னொரு பிறவி, மூன்றாவது பிறவி. இன்னும் எத்தனை பிறவிகள் சேர்ந்து இதே உடலில் வாழப் போகிறேனோ?”

“அன்னையே, ஒவ்வொரு பிறப்புக்கும். ஏதோ ஒரு காரணகாரியம் இருக்கிறது. வாழ்க்கையில் நேரும் துன்பங்கள், முட்டல்கள், முடிச்சுகள், எல்லாவற்றையும் கடந்து, பிறவியின் பயனை விளங்கிக் கொள்வதுதான் வாழ்க்கையே. முன்னறியாத இடத்தில் அடி வைக்கும்போது, புதுமையின் கிளர்ச்சி ஒரு புறம் துன்பமும் உண்டு; இன்பமும் உண்டு. துன்பங்களைத் தாங்கிக் கடக்கும் சக்தியும் எழுச்சியும் உள்ளத்தின் உள்ளே ஓர் இனிய அநுபவத்தைத் தரும் மேலெழுந்த வாரியான புலனின்பங்களில், சுயநலங்கள் பேராசைகள், அகங்காரங்கள் பிறக்கக்கூடும். அதுவே, அறியாமையாகிய திரையைப் போட்டு, உள்ளார்ந்த இன்பங்கள் எவை என்ற தெளிவில்லாமல் மறைத்துவிடும்...”

சத்தியர் சொல்லிக் கொண்டே போகிறார்.

“சாமி, இங்கே தத்துவங்களுக்கு இடமில்லை; பொழுதுமில்லை. இந்த மக்கள், உடல் வருந்த உழைத்தாலே உணவு கொள்ளலாம். அந்த நிலையில் ஆடியும் பாடியும் மகிழ்வதே இன்பம். இந்தப் பூச்சிக்காட்டு நச்சுக் கொட்டை மக்களை, இந்நாள் எப்படி நல்வழிக்குக் கொண்டுவந்து விட்டீர்கள்? சுவாமி, இவள். இவள், இந்தப் பிறந்த மண்ணுக்கே வந்து சேருவாள் என்று நான். எதிர்பார்த்தேனா?”