பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உணவும் உணர்வும்


உள்ளந்தெளிந்தவன் உண்ணவும் தெரிந்தான்
உவர்ப்பில் தெளிவும் துவர்ப்பில் வலிவும்
கார்ப்பில் வீறும் கைப்பில் மெலிவும்
இனிப்பில் தடிப்பும் புளிப்பில் இனிமையும்
என அறுவேறு சுவைக்குப் பயன்வேறு தெரிந்தான்
உணர்வெனப்பட்டதே உணர்வுக்கு அடிப்படை
ஆதலின் உள்ளத்தின் மனப் பாங்கில்
இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு
அச்சம் ஆத்திரம் வியப்பு நகைப்பென
எட்டுவகையாக இனங்கண்டான்
சாந்தி என ஒன்று கூட்டி ஒன்பதாக்கினர்
நாலாம் காலத்தில் நவரசம் என்றார்
பாம்பு உரித்து எடுத்த சட்டையோ
பசுமூங்கிலின் உள்ளே படர்ந்த ஏடோ
பால் நுரையோ வெண்புகையோ எனமெலிதாய்
ஆடை அறுவை கச்சை கலிங்கம்
துகில் முதலாக பணிப்பொத்தி ஈறாக
முப்பத்துஅறு வகை உடைவகை
பட்டிலும் பருத்தியிலும் நெய்யத்தெரிந்தான்
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
இழைகலனென்று பொன்னிலும் மணியிலும்
புனைந்த அணிவகை பெரிதினும் பெரிது
முத்தும் பவளமும் கைவளையாகும்

26