பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

31


அல்ல. அவர் எவ்வளவோ எக்ஸ்-பார்ட்டித் தீர்ப்புகளைக் கண்டு கடகடடுவனச் சிரித்து விட்டு, மடமடவென நடப்பவர். சர் சண்முகம் போன்றாரின் பணி, கட்சிக்கும், கட்சியின் மூலம் தமிழருக்கும் பயன்படவேண்டுமே என்ற கவலையினாலேயே, இதனை எழுதினேன்.

இன்றுமுதல் வேண்டுமானால் சர் சண்முகம், கட்சிப்பணி புரியத் தொடங்கட்டும், ஆயிரக்கணக்கிலே வாலிபர்கள் அவருடைய அணிவகுப்பிலே நிற்பர், அதைக் காணலாம். கட்சியின்பொருட்டுக் கொள்கைக்காகத், திராவிடத் தனி அரசு அமைக்கத் தியாகமும் வீரமும் உடனிற்கச் சர் சண்முகம், போர்க்கோலம் பூண்டால், எத்தனையோ வாலிபர்கள், தங்கள் வாழ்க்கையினைத் திரணமாகக் கருதித், தீயிலே குதிக்கவுந்தயாராவர். ஓராண்டு கட்சித் தொடர்பு, ஈராண்டு கட்சிநிழல்,மூன்றாண்டு கட்சி முறுவல் பெற்றோரும், இன்னமும் எனக்கொரு பதவியில்லையா, பட்டம் கிட்டவில்லையா, என்று கேட்டிடுவது என்போன்றவர் உள்ளத்தை என்ன பாடுபடுத்துகிறது, என்பதை விவரிக்கத் தேவையில்லை, இத்தகையோர் மத்தியிலே இருந்துழலும் ஒரு சில உண்மைத் தொண்டர்கள், உள்ளம் ஒடிந்துபோவதும், விழலுக்கு நீர்வார்த்துக் கெடுவானேன் என்று எண்ணுவதும் சகஜந்தானே! இந்நிலையை நீடிக்கவிடுவது, திராவிடத்தைக் கெடுப்பதாகும் என்று எச்சரிக்கிறேன், விசனத்தோடு, கட்சித் தலைவர் மாறவேண்டுமென்பதற்காகப் பெரியாரைக் கண்டித்து எழுதுவது முறையாகாது என்பதையும், கட்சிக்குப் பணிபுரிய, தலைமைப் பதவி இன்றியமை-