பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 86. ... , 8. . . .سه ده . * * a - 2 لا يه:ماره = الگ" பிடித்து, கன்னத்தை லேசாகத் தட்டி, ஒ, ப்யூட்டிஃபுல்! என்று செல்லமாய் குழறினான். . . 'காலி ராஸ்கல்' என்று கத்தினாள் அவள். பளார். என அறை விழுந்தது அவன் கன்னத்தில். அதிர்ச்சியினால் திலை குலைந்து, தன் கன்னத்தைத் தடவ அவன் ఐ மீட்டுக் கொண்டபோது, அவள் குனிந்து, ஒரு கால் செருப்பைக் கழற்றிப் பிடித்து நிமிர்ந்தாள். ஒகோ, அவ் வளவு திமிரா என்று கூச்சலிட்டாள். . அவள் அழகும் அலங்காரமும் வழியோடு போவோரைக் கவர்ந்தன என்றால், அவளது செயலும் பேச்சும் அந்தப் பக்கம் போவோர், சுற்றுப்புறத்தில் இருந்தோர் அனைவரை பும் சுண்டி இழுத்தன. நகரத் தெருவில் இப்படி ஒரு காட்சி கிட்டுகிறபோது விரைவில் கூட்டம் கூடுவதற்குக் கேட்க வேண்டுமா? கொடுங்கம்மா ஒண்ணு!’ சூடாக் கொடுங்க! இந்த மாதிரிப் பயலுகளுக்கெல்லாம் சரியானபடி பாடம் கத்துக் கொடுக்க வேண்டியதுதான்!” உற்சாகமாகக் கத்தும்படி அவரவர் உணர்வு தூண்டவும். பலரும் பலவாறு பேச்சு உதிர்த்தனர். ஒருவனது உணர்ச்சி செயலில் புகும்படி உந்தவும், அவன் சுயம்புவின் மூஞ்சியில் ஓங்கி அறைந்தான். அதைத் தொடர்ந்து சாடின பற்பல கரங் கள். சம்பந்தப்பட்டவர் படாதவர், போனவர் வந்தவர் எல் லோரும் சடபடவென அவன் முதுகில், முகத்தில், மார்பில், தலையில், கைக்கு வசமாக எட்டிய இடமெல்லாம் சூடாக அறைந்தனர். அய்யா, சாமி, அப்பா, சாமி! செத்தேன்: என்று ஒலமிட்டான் அப்பாவி சுயம்பு.