பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XII

விரிவாக மாற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். என்றாலும், எழுதிய எதையும் திரும்ப எழுத, என் மனம் ஒப்புவதில்லை. காரணம், எழுதும்போது இருக்கும் வேகம், விரிவான வடிவாக்கத்தின்போது வருவதில்லை. கூடவே, இவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும், இன்றைய அவசர உலகில் பெண்ணியவாதிகள் கூட, படிக்க மாட்டார்கள்.

'வளர்ப்பு மகளை' துவக்கத்தில் வெளியிட்ட ராணி முத்து நிர்வாகத்திற்கு நன்றியுடையேன். இந்த நாவலின் ஆய்வேடும், எனது படைப்புக்களில் முதலாவது ஆய்வாகும். இதற்காக, ஆய்வாளர் வை. சதாசிவம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘இந்திரமய’த்தை வெளியிட்ட வாசுகி இதழின் ஆசிரியரான, என் முன்னோடி எழுத்தாளர் தாமரைமணாளன் அவர்களுக்கும், அந்த இதழின் உதவி ஆசிரியராகச் செயல்பட்ட என் அருமைத் தோழர் செல்வா அவர்களுக்கும் நன்றியுடையேன். இப்போது இந்த இரண்டையும் உள்ளடக்கி வெளியிடும் பெரியவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அருமை மகன் ராமு அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.

சு. சமுத்திரம்
(டிசம்பர் 2002)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/14&oldid=1133656" இலிருந்து மீள்விக்கப்பட்டது