பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V

சமுத்திரத்திற்கு இந்த வித்தை நன்கு கைவரப் பெற்றிருக்கிறது. பெண்களின் உயர்ந்த உணர்ச்சிகளை நுட்பமாக தெளிவாக, நல்ல அழகு தமிழில் வெளியிடுகிறார். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை போன்றது இத்தகைய ஆற்றல். ‘கீட்ஸ்’ இதற்கு Filling some other's body என்று பெயரிடுவார். சு. சமுத்திரத்திற்கு இந்த ஆற்றல் அரிய திறனாகும். பெண்ணுள்ளத்து வேதனைகளையும், சிக்கல்களையும் சித்தரித்துள்ள முறையினையும், சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களைப் பற்றியும் இந்நாவலில் அறிந்துக் கொள்கிறோம்.

மொழிநடை

இலக்கிய ஆராய்ச்சியில் எழுத்தாளர் மொழிநடையை ஆராய்வதற்கே நிறைந்த புலமைத் தேவைப்படுகிறது. ஒருவர் பாடும்போது, அவர் குரலைக் கொண்டு அவர் இன்னார் என்று கண்டுபிடித்து விடுவதுபோல, எழுத்தாளரின் எழுத்தைப் படித்த அளவிலேயே இது இன்னாருடைய நடை என்று சொல்லிவிடலாம். எல்லோருமே மொழியைப் பயன்படுத்தினாலும் படைப்பிலக்கிய ஆசிரியர் மொழியை தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதற்கு ஏற்ற வாயிலாகக் கொண்டு தன் போக்கிற்கு ஏற்ப அமைப்பதை மொழிநடை என்கிறோம்.

சு. சமுத்திரத்தின் மொழிநடையிலே தமிழின் ஆற்றல் மிகுதியாகக் காண முடிகிறது. படிப்போரை ஈர்க்கும் வேகம் நடையிலேயே காணலாம். இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தியைக் காணலாம் உணர்ச்சிக்கேற்ற நடையையும் அமைத்துள்ளார்.

"சு, சமுத்திரம் அவர்கள் சொற்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்."

"அந்தக் குழந்தை 'அம்மா அம்மா' என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது. அவள் இதயத்தைத் தொட்டது."

"பாசத்தைக் கொட்டிக் கொண்டே அவள் தன்னையும் ‘கொட்டுவதை’ உணர்ந்தாள் மல்லிகா."

"அந்த நல்ல ராமனைக் கட்டியே, சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மகள் கட்டினால் அட பகவனே..."

"இந்த மூதாட்டி யின் பெயர்... பெயர் எதற்கு? அவளே பெயரைப் பற்றிக் கவலைப் படாதபோது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/7&oldid=1133648" இலிருந்து மீள்விக்கப்பட்டது