பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வளைச் செட்டி உடைந்த வளையலே அவள் பொறுக்கி வைத்துக் கொண்டாள். - - அப்போது அவளுக்கு ஏழு வயசு, அவனுக்குப் பத்து வயசு, அவன் ரங்கத்துக்கு அத்தை பிள்ளே. அப்பா இல்லை. இருக்கிற கையகலம் பூமியை வைத்துக்கொண்டு அந்த அத்தை அவனைப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத் தாள. இப்போது ரங்கத்துக்கு வயசு பதினேழு, அன்று வளையலே அம்மா உடைத்தாள்; இன்று அந்தக் கை வேறு வளையலே ஏற்கவில்லை. - ★ அவள் தங்தை வெளியிலிருந்து வந்தார். எங்கெங்கோ அலேந்துவிட்டு வந்திருக்கிருரென்று தெரிந்தது. அவர் வந்தவுடன் தொப்பென்று கீழே உட்கார்ந்தார்; 'அம்மா, ரங்கம், ஒரு தம்ளர் தீர்த்தம் கொண்டுவா அம்மா' என்று கேட்டார். ரங்கம் வரவில்லை. அவள் தாய்தான் தண்ணி ரைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதைக் குடித்துத் தம்ளரைக் கீழே வைத்தார். உடம்பிலுள்ள வேர்வையைத் துண்டால் துடைத்துக் கொண்டார். அவர் என்ன சொல்லப்போகிருரோ என்று ஆவலுடன் காத்து கின்ருள் அவர் மனைவி. அவர் கிமிர்ந்து பேசினர். 'ஒன்றும் பிரயோசனம் இல்லை. நேற்று வரைக்கும் கம்பிக்கையோடிருந்தேன். சந்திரமெளலியும் நிச்சயமாக இந்த வரன் முடிந்துவிடும் என்றே சொன்னன். 'இரண்டாக் தாரம். இரண்டு குழைந்தைகள் வேறு. அவ னுக்கு வலிக்கிறதா என்ன? என்று நானுந்தான் கினைத் தேன். உலகத்தில் நம்மைப்போல எத்தனையோ பேர்கள் பெண்களே வைத்துக்கொண்டு தவிக்கிருர்கள் என்பதை அப்போதைக்கு மறந்துபோனேன்."