பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் 6盘省 ஒப்பித்தபோது சிலருக்கு அவனிடத்தில்கூடச் சந்தேகம் தோன்றியது. - 4 'முதலாளி கடிதம் எழுதினபோது போகமாட்டே னென்று சொன்னவர் இப்போது முதலாளியைத் தாமே பார்க்க ஏற்பாடு செய்கிருரென்று கேள்வி' என்ருன் ஒரு தொழிலாளி. . 'என்னப்பா உளறுகிருய்? புலி பசித்தால் புல்லைத் தின்னுமா?. அவர் வீட்டில் யாருக்கோ உடம்பு சரியில்லே யென்று சொன்னர்கள். அதனல் அதிகமாக இங்கே வர முடியவில்லை.” - "என்னதான் இருந்தாலும் வாரத்துக்கு ஒரு முறை. யாவது கூட்டம் போட்டுப் பேசாமல் இருக்கும்படி என்ன வந்துவிட்டது? கான் சொல்கிறதைக் கேள். இன்று மாலே வேலை சிறுத்தக் கமிட்டிக் கூட்டம் கடக்கப் போகிறது. அதற்கு வேலாயுதம் அநேகமாக வரமாட் டார். என்ன இருந்தாலும் பிள்ளே குட்டிக்காரர் என்ற ஞாபகம் இல்லாமல் பேசுகிருயே!" என்ருன் முதல் ஆசாமி. - அவன் சொன்ன ஜோசியம் பலித்தது. அன்று கூட் டத்துக்கு வேலாயுதம் வரவில்லை. எதிர்பாராதவண்ணம் விட்டில் இருக்கவேண்டிய கிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்ட படியால் கூட்டத்துக்கு வரமுடியவில்லே' என்று ஒரு கடிதம் மாத்திரம் எழுதியிருந்தான். - இளைஞர்களுக்குச் சந்தேகம் உறுதியாகிவிட்டது. அந்தக் கூட்டத்திற்கு அநேகமாக இளைஞர்களே, ஒற்றை ஆசாயிகளே, வந்திருந்தார்கள். அன்று முடிவாகவேண் டிய விஷயத்தை ஒத்திப் போட்டுவிட்டார்கள். ஆனல்