சம்பந்தர் சீர் 7g
கொளக்கருதும் மலமாயைக்
குரங்குகவர்ந் திடுமோ? குரங்குகவ ரா(து)ன்னது
குறிப்பில்ஆகப் படினும் துளக்கமற உண்ணுவனே?
தொண்டைவிக்கிக் கொளுமோ? சோதிதிரு வுளம் எதுவோ? ஏதும்அறிக் திலனே!
கன. சம்பந்தர் சீர்
w
சைவம் தழைக்கத் தோன்றியருளிய சான்ருேருள் திருஞானசம்பந்தரும் ஒருவர். அவர் சைவ சமய சாரியர் கால்வருள் தலைவரெனப் போற்றும் தகுதி யுடையார். அவர் காலத்தில் வாழ்ந்த நாவுக்கரசரும் பிற்காலத்தில் விளங்கிய சுந்தரரும் தலேக்கொண்டு போற்றிய அருட்பெருஞ் செல்வர். 'கற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன், கல்லிசை ஞானசம்பந்தன், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்' என்று அவரைப் பலவாறு சுந்தரர் தமது செந்தமிழ்த் தேவாரப் பாக்களில் சிங்தை குளிர்ந்து ஏத்துகின்ருள்.
காவிரி வளங்கொழிக்கும் சோழ நாட்டில் சீர் காழித் திருநகரில் அவதரித்த செல்வராய சம்பந்தரை இறைவி ஞானப்பாலே ஊட்டி ஞானசம்பந்தராக்கி யருளினர். ஞானப்பாலே உண்ட கற்றவக் குழந்தை மூன்ருண்டுப் பருவத்திலேயே முத்தமிழ்க் கவிதை