100 இடைவிடாமலும் தளராமலும் ஒவாது செய்ய வேண்டியுள்ளது. ஆதலால் எந்நிலையிலும் மக்கள் நன் முயற்சிகளோடு ஊக்கமாய்ச் செயலுறுவது கடமை. விதியின் வலிமையை நினைத்துக் கொண்டு வாளா இருத்தல் ஆகாது. விதியையும் மதியால் வெல்லலாம் என்ற முன்னோர் மொழியை நினைவில் இருத்தி எடுத்த பிறப்பில் ஏற்று கொண்ட வினை வலியைக் குறைக்கவும். இன்னும் ஏற்க வேண்டியவினைச் சுமைகளை அடியோடு மாய்க்கவும் நன்முயற்சிகளை உலைவின்றித் தாழாமல் மேற்கொண்டு நாளும் உழைத்து வர வேண்டும். மக்கள் முயற்சியாளராய் இருப்பதொன்றே இறை யருளின் துணை பெறும், அருள் வலிமை துணை நின்றால் ஊழ்வலிமை குன்றிவிடும். எடுத்த பிறவியின் ஏன்று கொண்ட ஊழ்மட்டுமே திருவருட் பதிவு ஏறினமையால் வலிமைமிக்கது. இந்த ஊழ் ஒரு பிறவிக்கு மட்டும் ஏன்ற ஊழ் ஊழையும் உப்பக்கம் காண்பர் என்ற விடத்து வரும் ஊழ் இந்த ஏன்ற வினையைக் குறிப்பது தான் ஏற்க வேண்டிய ஊழோ அளவு காண முடியா அவற்றை யெல்லாம் நுகர்ந்து கழிப்பதற்கு எத்தனையோ பிறவிகள் எடுத்துத் தீர வேண்டும். ஆனால், அளவில் அவை மிகுதியே தவிர, வலிமையில் மிகுந்தவை அல்ல. ஏனென்றால் இன்னும் அவற்றில் திருவருள் வலிமை சேரவில்லை. ஆதலால் ஏன்ற ஊழின் வலிமை ஆள்வினைக்கு இரங்கும் அருள் துணையில் ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் எனவும், இனி ஏற்க திருவருள் வலிமை சேர்ந்த தாகலின் பற்றற்ற ஆள்வினையால் அடியோடு அழிந்துவிட முடியும் எனவும் தெளிந்து கொள்ளலாம்.