பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 1

எப்படியும் இன்று இதற்கொரு விடைகண்டாக வேண்டும் என்ற வேகத்துடன், பேனாவையும் பேப்பர்களையும் எடுத்துவைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்தேன். -

நெஞ்சிலே பரபரப்பு தான் நிறைந்து கிடக் கிறது. நேரடியான பதில் தரும் நினைவுகள் எதுவும் எழவே இல்லை.

கைகளிலும் படபடப்பு. எழுதத் துடிக்கும் சுறு சுறுப்பு எழுகிறது என்றாலும், எதுவும் எண்ணத்தில் இராத பொழுது எப்படி ?

நேரம் ஆக ஆக மனதை ஒரு நிலைப்படுத்திப் பார்க்க முயல்கிறேன். கண்கள் ஒரு மாதிரியாக மூடிக் கொண்ட மோனநிலை.

வெளியுலகில் என்ன நடக்கிறது என்று தெரி யாத ஒரு தூக்க நிலையில், தியான நிலையில், சாய்வு நாற்காலியில் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தேன்.

எத்தனை நேரம் இப்படி இருந்தேன் என்று எனக்குத் தெரியாது. -

தம்பி’ என்ற குரல் கேட்கிறது.