பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வாளார் நெடுமாறன் வள்ளுவனார்!

வள்ளுவருக்கும் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு உண்டு, எப்படி சம்மந்தம் இருக்கிறது என்றெல்லாம், எனக்குள்ளே நான் கேட்டுக் கொண்டு, அதற்கான விடையை அறிந்து கொள்ள, திருவள்ளுவர் பற்றிய நூல்களையெல்லாம் தேடி ஆரம்பித்தேன்.

கையில் கிடைத்த நூல்களையெல்லாம், குறு குறுக்கும் உணர்வுகளுடன் புரட்ட ஆரம்பித்தேன். செய்திகளைத் திரட்ட ஆரம்பித்தேன்.

செய்திகள் எல்லாம் குறிப்பாகவே இருந்தன. விளக்கமாக இல்லை. சந்தேகம் எழுப்பக் கூடியன வாகவே அமைந்தன. சான்றுகளாக இல்லை. புராணமாக இருந்தன. புரியும்படியாக இல்லை.