o, -
| 206 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
நிலை, குரு போதிக்கின்ற இனிய நிலை, அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
% குழந்தைக்கு சீரணிக்கக் கூடிய உணவினைக் கொடுப்பது தாயின் கடமை. குழந்தைமேல் அதிக ஆசை வைத்து, கடினமான உணவுப் பொருட் களைத் தருகிறபோது, குழந்தைக்குப் பசி அடங்கு ‘வதற்குப் பதிலாக, வயிற்று வேதனை உண்டாகி விடுவதுபோல, கற்கும் அளவும் நன்கு தெரிந்தாக வேண்டும்.
சிறுகச் சிறுக சிறிய கருத்துக்களைப் புரிந்து கொண்டு, பிறகு நுண்மாண் நுழைபுலக் கருத்து களுக்குள் நுழைய வேண்டும்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. (725)
முடிந்தவரை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான், அறிவுடையோர் கூடியுள்ள சபைகளிலும், பிறர் பேசும் கருத்துக்குப் பதில் கூறவும், மாற்றுக் கருத்துக்களை வளமாக எடுத்து உரைக்கவும் முடியும் என்பதே என் குறளின் பொருள் என்று கூறிமுடித்தார் வள்ளுவர்.
இதுவரை, கற்கும் முறையைக் கூறினேன்.
2. இனி, நீங்கள் கேட்டி விளையாட்டுத் ‘திறமையைக் கற்று, தேர்கின்ற முறைகளை