பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் இல்லம் 39

கொண்டுவரும் திறமை இல்லாததாலும் பிள்ளைகளைப் பயனற்றவராக்கித் தாமும் பயன்பெறாது போகின்ற சிலரும் உலகில் உள்ளனர் ஆதலால், அவர்களை நோக்கி, மனிதர்களே! அறிவு நிரம்பிய நன்மக்களைப் பெற்று, பயன் பெற்று உலக வளர்ச்சிக்கும் உதவுதலே சால அழகிதாம் என்று கூறியுள்ளார் திருவள்ளுவனார். மேலும், நிலநீர், வீடுவாசல், நகைநட்டு முதலியவற்றைப் பெறுவதைப் பேறு என்னாமல், பிள்ளை பெறுவதையே பேறு (பெறுதல்) என்னும் சொல்லால் குறிக்கின்றனர் தமிழ் மக்களும். எடுத்துக்காட்டு வேண்டுமானால், ‘என் மகள் கருவுற்றிருக் கின்றாள், பிள்ளைப்பேறு பார்ப்பதற்குப் பணம் வேண்டும்’ என்றும், ‘தாய் மகளுக்குப் பிள்ளைப்பேறு பார்ப்பதற்காக வந்திருக்கிறாள்’ என்றும் வழங்கும் உலகவழக்குகளே போதும்! இவ்வுலக வழக்குகளும் இக் குறளும் ஒன்றுக் கொன்று உறுதுணையன்றோ?

அறிவற்ற, பயனற்ற பிள்ளைகளைப் பெறுவதைவிட பெறாமலே இருப்பதும், மரக்கட்டையைப் பெறுவதும், பொம்மைகளை வைத்துக்கொண்டு கொஞ்சுவதும் நல்லது; ஏன்? பெறுந் துன்பமும், பொருட் செலவும் குறையும் அன்றோ? இக்கருத்தையடக்கி அறிவறிந்த மக்கள்’ என்று பாடியுள்ள நயம் நன்று நன்று!

பிள்ளைகள் கெட்டவராய் இருந்தால், பெற்றோர் களுக்கும் கெட்ட பெயரும் கெடுதியும் நேரிடுகின்றன. பிள்ளைகள் நல்லவராய் இருந்தால், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரும் நன்மைகளும் ஏற்படுகின்றன. நன்மை ஒரு வேளை மட்டுமா? ஒரு நாளைக்கு மட்டுமா? இல்லை;