பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ளிடையே நன்கு பரவத் தொடங்கியது என்று கூறுவது மிகையாகி விடாது. அந்தக் காலத்தில் நான் எழுதி வெளியிட்ட சிறுசிறு நூல்களை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டும் என்று என்னுடைய நண்பர்கள் பெரிதும் ஆர்வத்தினை உண்டாக்கி னார்கள். அத்தகைய தொகுப்பு நூல்களில் ஒன்றுதான் இந்த நூலும் ஆகும். - 1952ம் ஆண்டு முதல் 1957 வரையில் டெல்லி பாராளு மன்றத்தில் நான் உறுப்பினராக இருந்த காலத்தில் அந்த சபையில் திருக்குறள் ஒலிக்குமாறு செய்ய முடிந்தது என்பதனைப் பணிவுடன்தெரிவித்துக் கொள்கிறேன். பாரத நாட்டின் வடக்கே பல முக்கிய நகரங்களுக்கும் சென்று குறள் மணம் பரப்புகின்ற பணியினைச் செய்யமுடிந்தது. பல முறை கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று திருக்குறள் தொண்டு செய்வதில் மன நிறைவு பெற்றேன். - தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும், திருக்குறள் பயிற்சி பெற்றிராவிட்டால், தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் பெருமைக்கு உரியவர் ஆகா மாட்டார் என்பது எளியேன் கருத்தாகும்.