பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ഇ.സി வரவேண்டும்! தமிழ்நாடு எத்தனையோ அறிஞர்களையும் மகான் களையும் உருவாக்கிப் பெருமை பெற்றிருக்கிறது. அதே போல், அந்த அறிஞர்களும் மகான்களும் எண்ணிலடங்காக் கருவூலங்களை - எண்ணங்கள் வாயிலாக - நூல்கள் வாயிலாக அளித்துப் பெருமை பெற்றிருக்கிறார்கள். தமிழ்மறை என்றாலே, திருக்குறளும் திருவள்ளுவரும் நினைவில் நிழலாடும். அதுபோல் திருக்குறள் என்றாலே, அப்பா திருக்குறளார் அவர்கள்தான் மக்கள் மன்றத்தில் திருஉலா வருவார்கள். அப்பா திருக்குறளார் அவர்கள் கூட்டத்தில் பேசுகிறார் என்றால், வானொலியில் உரையாற்றுகிறார் என்றால், அவர் உரை கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். நகைச்சுவையோடு தத்துவங்களை எளிய தமிழில் சொல்லும், பாங்கு அனைவரையும் ஈர்க்கக் கூடியதென்பதை யாவரும் அறிவர். W. பட்டி தொட்டிகளெங்கும் பாமரர்களும், படித்தவர் களும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அப்பா திருக்குறளார் அவர்களின் திருக்குறள் நெறியால் பயன்பட்டவர்கள் ஏராளமானவர் என்றால் மிகையில்லை. 'ஏ, மனிதனே' என்று, இந்தச் சமுதாயத்தைப் பார்த்து, அறிநெறிகளால் அவர் சாடும் பக்குவத்தை வேறு யார் சொல்ல முடியும்? மனிதன் மனிதனாக வாழ வேண்டும். என்பதை அறிவுறுத்தும் பாங்கே தனி. - - அரசியலிலும், அ றி வி ய லி லு ம் , வாழ்வியலிலும், பொருளியலிலும், அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் எல்லோரையும் வியக்கச் செய்யும். அவர் தமிழகம் செய்த