பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 45 பயனில்லாத அதனை நீக்கிவிட்டு உள்ளிடு என்கின்ற அரிசியினைக் கொள்கின்றோம். உள்ளிடு என்கின்ற அரிசி இல்லையென்றால் உமியினைப் பதர் என்று கூறி ஒதுக்கி விடுகின்றோம். - - கிலத்தில் விளைந்திருக்கின்ற தானியத்தில் பதர்கள் மிகுந்துவிட்டால் தீங்காகும்; பயனில்லாதது ஆகும். காட்டிற்குத் தீமையுமுண்டாக்கும். மக்கட் பிறவியில் ஒருவனுக்கு இருக்கவேண்டிய அறிவு, உள்ளிடு போன்ற அரிசியாகும். அந்த உள்ளிடு ஒரு வனிடத்தில் இல்லையென்றால் அவன் பதருக்குச் சம மாவான். அவனைப் பதர் என்றே கூறவேண்டும். பதர் என்று கூறப்படுகின்ற வகையில் வரக் கூடிய மக்கள் பயனில்லாதவர்கள். ஆதலால்தான் மக்களுக்குள்ளே அவர்களைப் பதர் என்றே கூற வேண்டும் என்பதே ஆசிரியரின் கருத்தாகும். அவர்கள். பயனில்லாதவர்கள் என்று காட்டிக் கொள்கின்ற முறையில் எப்பொழுதும் பயனில்லாத சொற்களையே அடிக்கடி விரும்பிப் பேசுவார்கள். -

மகனல்ல

இக்கருத்தினைக் கூற வந்த ஒரு குறட்பா பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்-என்ற அடியினை முன் வைத்துத் தொடங்குகின்றது. இந்த அடியில் மகன் எனல் என்பது பன்முறையும் ஆழ்ந்து உணர்ந்துகொள்ள வேண்டியது ஆகும். ‘. . . . மனிதன் என்று கூறாதே என்று சுட்டிக் காட்ட வேண்டியே மகன் எனல்’ என்று கூறினார். மக்கட் பிறவியைச் சேர்ந்தவர்கள் அறிவுடன் இருந்தால், பயனுள்ளதையே பேசுவார்கள். -