பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi பெருந்தகை வீ. முனிசாமி அவர்கள் திருக்குறளார்" குறள் காவலர் திருக்குறள் கேசரி’, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம் போன்ற பாராட்டுப் பட்டயங்கள் பலவற்றை, அறிஞர் பெருமக்களிடமிருந்து, அவ்வப்போது பல்வேறு இடங்களிலும் பெற்றிருப்பதே அவரது ஓங்கு, புகழுக்கு எடுத்துக்காட்டாகும். குறள் நெறியைப் பரப்புவதற்கு என்று திருக்குறளார் நடத்தி வந்த குறள் மலர்' என்ற இதழும், குறள் நெறிக் கருத்துக்களைப் பற்றி அவ்வப்போது அவர் வெளியிட்டுள்ள சிறுசிறு நூல்களும் அவரது எழுத்தாற்றல் சிறப்புக்கும், அவரது பெருமைமிகு புகழுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவனவாகும். - இரா. கெடுஞ்செழியன்