பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

63

 கவியரசர் முடியரசன்


மானங் காப் போம் விரிந்ததலைத் தென்னையிளங் கீற்றுட் பாய்ந்து விளையாடிச் சலசலவென் றொலிஎழுப்பி விரிந்தமலர்க் கொடிபடரும் மாடத் துள்ளே மெல்லென்று வருதென்றல் நீவி யின்பம் புரிந்திருக்கத் தேய்பிறைதன் ஒளியை வீசப் புந்தியினை ஒருநிலையிற் செலுத்தி நின்று சுரிந்துவிழும் அலைகடல்சூழ் உலக மாந்தர் சூழ்நிலையை மனப்போக்கை நினைந்திருந்தேன். தென்றலையுந் தோல்வியுறச் செய்யும் நல்லாள் திருந்தடியிற் சிலம்பொலியும் கேளா வண்ணம் மென்றளின் அடியெடுத்து நிலத்தில் வைத்து மெல்லெனவந் தென்னருகில் நின்று'நெஞ்சில் ஒன்றிவருஞ் சிந்தனைதான் யாதோ? என்றாள்; உயர்மானம் இன்றுள்ள மாந்தர் வாழ்விற் குன்றிவரும் நிலைகண்டேன்; இந்த வாழ்வு குறள்பிறந்த நாட்டினிலோ என்று நைந்தேன்.