பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

68

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 68 0 கவியரசர் முடியரசன் நல்லதோர் குடும்பம் நடத்திடும் நெறிகள் இல்லையோ நம்பால்? ஏனவை மறந்தோம்? இன்சுவைக் கனிகள் என்றுங் குலுங்கும் அன்பு மணமலர் அளவிலா திலங்கும் இன்பப் பூங்கா இல்லற வாழ்வே என்பதை மறந்தோம் இடரினில் புகுந்தோம்; பொருளே குறிக்கோள்! பூமியில் பிள்ளைகள் பெறலே குறிக்கோள்! பெருவயிறாரத் தினலே குறிக்கோள்! இவ்வணந் திரிந்தால் அதுவா வாழ்வு! அதுவோ இன்பம்? எதுதான் வாழ்வெனப் புரியா திருந்தோம்; இதுதான் வாழ்வென இயம்பினன் வள்ளுவன்; அவ்வழிச் சென்றினி அன்பினைப் பெறுவோம் செவ்விய நன்மைகள் சேர்ந்திட முயல்வோம் ஏழிசை யாழென இனியரும் குடும்பம் வாழிய வாழிய வாழிய நலமே. 23.12.1967