பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

69

 கவியரசர் முடியரசன்


சிரிப்பும் அழுகையும்

கார்முகில்கள் நீர்சொரிய, வான்மு ழங்கக் கண்கவரும் கொடிமின்னல் விளக்கங் காட்டச் சிர்பெருகும் நிலமகளை ஏரைத் தாங்கும் செய்யவளைப் பரிசமெனக் கலப்பை தந்து பார்புகழ மணம்புணர்ந்தான் உழவன் என்பான் பாராமல் ஒருநாளும் இருந்த தில்லை; ஒர்பொழது செல்லாமல் கிழவன் நிற்பின் ஊடிவிடும் என்றஞ்சி நாளுஞ் செல்வான்.

நெஞ்சுவந்து பிரியாமல் வாழும் நாளில் நிலமங்கை ஈன்றெடுத்த செல்வங் கண்டான் விஞ்சுகின்ற மகிழ்க்கடலில் திளைத்து நின்றான் விளைநிலத்தாள் தருஞ்செல்வம் உலகுக் கெல்லாம் எஞ்சலிலா இன்பத்தை ஈத லாலே ஈன்றதொரு ஞான்றையினும் பெரிது வந்தான் தஞ்சமென வந்தவரைத் தாங்கு கின்ற தனியறத்தை வேளாளன் பேணு கின்றான்.