பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

91

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 91 இ கவியரசர் முடியரசன் மாறுபட்ட சூழ்நிலையால் சோர்வும் உற்று மதிமயங்கி மனம்கலங்கி நிற்கும் போது வீறுபெற்ற செயலாளர் என்பால் வந்து விழாவரங்கில் பாட்டரங்கத் தலைமை ஏற்கக் கறிவிட்டுச் சென்றனர்காண் கார்காலத்தில் குயிலைத்தான் வாய் திறந்து பாடச் சொன்னார் வாரிவிட்ட இவர்திறத்தை வாழ்த்த மாட்டேன்; வாழ்த்துகின்றேன் பேரவையை வணங்கி நின்றே அறமுரைத்த பெரும்புலவன் நாட்டுக் காக அமைத்தவழி வாய்மைவழி வாழ்வுக் காக மறமகற்றும் நல்லவழி,கல்லும் முள்ளும் மாற்றிவரும் துாயவழி, மேடு பள்ளம் அறவெறுக்கும் நேர்மைவழி அருளைச் சிந்தும் அன்புவழி, இன்பமெனும் தென்றல் வீசி நறுமணத்தை வழங்குவழி, கான்விலங்கு நடவாத அச்சமிலா வழியும் ஆகும். தனிமனிதன் வாழ்வுக்கு வழிகள் சொல்லும் சமுதாய வாழ்வுக்கும் வழிகள் சொல்லும் இனிமைமிகு மனைவியொடு கடி வாழும் இல்லறத்து மாந்தருக்கு வழிகள் சொல்லும் கனிவுதரும் இவ்வுலக வாழ்வை நீத்துக் காவிக்குள் நிற்பவர்க்கும் வழிகள் சொல்லும் தனியுடைமை பொதுவுடைமை என்றிரண்டு தரப்பட்ட ஆட்சிக்கும் வழிகள் சொல்லும்