பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{} வள்ளுணச் சொல்லமூதம் பெற்றவனே அரசருள் ஏறு' என்று கூறியருளிஞர் திருவள்ளுவர். அரசனுக்கு எப்பொழுதும் மாருது, இயல்பாக அமையவேண்டிய பண்புகள் நான்கு பகைவர்க்கு அஞ் சத தகைமை, அருள் நிறைந்தகொடையுள்ளம், துண்ணி தாக தோக்கும் அறிவுடைமை, வினை செய்தற்கண் மன வெழுச்சி ஆகிய பண்புகள் இயற்கையாகவே அமையப் பெற்ற அரசனே நிலளுளும் திருவுடையகுதத் திகழ முடியும் அவன்பால் செயல் விரைவும் சிந்தையுள் திறைந்த கல்வியும் சிறந்த ஆண்மையும் நீங்காமல் திமிர்த்து காணப்படும். - அரசன் தனக்குரிய அறத்தின் வழுவாது ஒழுக வேண்டும். ஒதலும் ஈதலுமாய பொதுத் தொழிலினும் படைக்கலப் பயிற்சியும் பல்லுயிரோம்பலும் பகைத்திறம் தெறுதலும் ஆகிய சிறப்புத் தொழிலினும் வழுவாது திற்றல் வேண்டும். கொலே, களவு, பொய், சூது, காமம் முதலாய குற்றங்கள் நாட்டின்கண் நிகழாமல் காத்தல் வேண்டும். வீரத்திற்கு ஊறு விளையாத மானத்துடன் வினங்கவேண்டும். வேலேந்திய வீரன், மதவேழத்தை எறிந்தாலும் விலங்கை எறிந்தான் என்பர் என்று எண்ணி அச் செயலேப் புரிய விரும்பான். முன்பு வெட்டுண்டவர் தனக்கு ஒப் பாணவராயினும் பிறர் படை தீண்டிய எச் சிலென்று அவரையும்வெட்ட விழையான். தனக்கு இளையவர் ஒப் பின்மையால் வீதத்திற்கு இழுக்கு வினையுமென எண்ணி அவரொடும் போர் புரியான். தன்னின் மூத்தோரை எதிர்த்து வாள் வீசுதல் அறமாகாதென அதனையும் செய் யான். தன்னைக் கண்டு அஞ்சிப் புறங்காட்டி ஒடுவார்