பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணையுங் ஆற்றலும் 31 ஆர்த்தசபை நூதிருே துவர் ஆயிரத்தொன் ரும்புலவர் வார்த்தை பதினு பிரத்தொருவர்-பூத்தாச்ைத் தண்ட கரைத்திருவே ! தாதாகோ டிக்கொருவர் உண்டாவின் உண்டென் நறு' என்று உறுதிமொழி உரைத்தார் தமிழ் மூதாட்டியன்ச். மக்கள் அனைவரும் தக்கார் நல்லவையில் புக்கிருத்தல் ஒல்லாது. நூற்றில் ஒருவரே அதற்குரிய ஆற்றல் பெற்று ஒளிர்வர். அவருள்ளும் புலவரென்ற தகுதி யுடன் புக்கிருக்கும் மிக்கார் ஆயிரத்தில் ஒருவராகவே அமைவர். இத்தகைய அறிஞர் நிறைந்த அவை அள் அஞ்சாது செஞ்சொல் வழங்குவார் பதிஞ. விரத்தில் ஒருவராகவே பாருள் காணமுடியும். அச் சொல்வல்ல புலவரைப் போற்றிக் காக்கும் புரவலரோ கோடிக்கு ஒருவராகவே திகழ்வர் என்று தேர்ந்து மொழிந்தார் அம் மூதாட்டியார். இவர் படிப்படியாக விளக்கிய இக் கருத்தைத் தெய்வப் புலமை சான்ற திருவள்ளுவர் இரு வரிக்குள் சுருக்கமாகச் சொல்லும் திறம் வியக் கற்பாலதாகும். "பகை:கத்துச் சாவாள் எளியர்; அரியர் அவையகத் தஞ்ச தவர்' என்பது அவர்தம் சொல்லமுதம் ஆகும், பகைவர் போர்க்கோலம் தாங்கி நிற்கும் போர்க்களத்தில் அஞ்சாது புகுந்து போர் புரிந்து ஆருயிரை இழப்பவர் அநேகச். ஆளுல் கற்றவர் அவையுள் அஞ்சாது புகுந்து சொல்ல வல்லார் மிகவும் அரியர். அத்தகைய அரிய ஆற்றலேப் பெற்றவர், தாம் கற்றவற்றை மற்றவர் மனம் கொள்ளு மாறு சொல்லவேண்டும். அவற்றினும் மிக்க பொருள்கனே மிகக் கற்ருரிடத்து அறிந்துகொள்ளவேண்டும்.