பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. கள்ளும் கவறும் கள்ளுண்ணல், கவருடல், பிறர்க்குரிய மகளினை விரும்புதல், பொய்ம்மொழிதல், கொலே புரிதல் ஆகிய ஐந்து செயல்களையும் அறிவுடையோர் ஐம்பெரும் பாதகங்கள் என்று பழித்துரைப்பர். இவற்றைத் திருவள்ளுவர் தமது நூலில் தனித்தனியே எடுத்து விளக்கிக் கடியுமாறு அறிவுறுத்துகின்ருர். தாசியர் தேசம் பொல்லாது என்பதை வரைவின் மகளிர் என்ற பகுதியில் வகுத்துரைத்த வள்ளுவர் அதன் இறுதியில் திருமகனால் துறக்கப்பட்டார்க்குத் தொடர்புடையன மூன்றைக் குறிப் விட்டார். - 'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவனும் திருதிக்கப் பட்டர் தொடர்பு என்பது அவர் சொல்லமுதமாகும். கணிகையரும் கள்ளும் சூதும் ஆகிய மூன்றும் இலக்குமியால் வெறுக்கப் பட்ட கயவர்க்கு நட்புடையன என்ருர், வெண்பாவிற் புகழேந்தி"யென வியந்து போற்றும் சிறப்புற்ற செந்தமிழ்ப்புலவர், தமது நளவெண்பா என்னும் நன்னூலில் சூதாடப் புகும் நளனுக்கு நல்லமைச்சர் சொல்லும் அறிவுரையாகப் பாடலொன்றை அமைக்கின்ருர், "காதல் கவருடல் கள்ளுண்டில் பொய்ம்மொழிதல் ஈதல் மறுத்தல் இவைகண்டாய்-பேதில் சினையாமை ஆைகுத் திருநாடி செம்மை தினேயடிை பூண்டார் தெறி' பிறர் மனே தோக்குதல், சூதாடல், கள்ளுண்ணல், பொய் பேசுதல், உலோபம் செய்தல் இவை போன்ற