பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奈登 வள்ளுவர் சொல்லமுதம் என்றே குறித்தார். வேண்டும் வழிப் பொருள் கொடாத, உலோபமும், தன்மையின் நீங்கிய மானமும் அளவிறந்த உவகையும் ஆகிய மூன்றும் அரசர்க்குப் பெருங் குற்றங் களாகக் கருதப்படும். குற்றத் தரும் மானத்தை மண் பிறந்த மானம் என்று வள்ளுவர் குறிப்பிட்டார். இவறலும் மாண்பிறத்த மனமும் மரணு ξε உவகையும் ஏதம் இறைக்கு § என்பது அவரது சொல்லமுதம். காமத்தால் கட்டுண்ட இலங்கை வேந்தனுகி இராவணன், இராமனின் மனைவியாகிய சீதையிடத்துக் காதல் கொண்டான். அவளை அடைய விரும்பிய அரக்கர் கோமான் அச் சீதையை இருந்த இடத்துடன் பெயர்த்துத் தூக்கிச் சென்ருன். தனது பெருநகரத்திலிருந்த அசோக வனத்தில் அரக்கியர் நடுவே அவளைச் சிறை வைத்தான். அவனது தம்பியரெல்லாம் பிறர் மன நயத்தில் தகச தெனத் தக்க அறிவுரைகள் வழங்கியும் கேட்டானில்லை. இறுதியில் இராமனது வில்லம்பால் கொல்லப் பட்டா னன்ருே இராவணனது உடம்பை இராமனது பகழி. துணைத்த விதத்தைக் கம்பர் கவினுறச் சித்திரித்தார். வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் என்விருக்கும் இடனின்றி உயிரிருக்கும் இடனுற இழைத்த வாருே ே கன்னிருக்கும் மலர்க்கூத்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உன்னிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதே ? ஒருவன் வாணி',