பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

கொண்டால், மக்களுக்கு இறைவன்பாலுள்ள தொடர்பே அற்றுவிடும். ஆகையினால் அறியாமை என்னும் முடம் முதலில் நீங்க வேண்டும் என்று அடிகள் கூறுகிறார்.

இவ்விடத்தில் காந்தியத்தை நன்குணர்ந்த இரண்டு கவிஞர்களின் பாடல்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அல்லா என்பார் சிலபேர்கள்
அரனரி என்பார் சிலபேர்கள்
சொல்லால் விளங்கா நிர்வாணம்
என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லாம் இப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்குமன்றோ?
அக்தப் பொருளை நாம் நினைக்து

அனைவரும் ஒன்றாய்க் குலவிடுவோம்.

தெய்வம் பலபல சொல்லிப்-பகைத்
     தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
     ஓர்பொரு ளானது தெய்வம்
தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்
     திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
     கும்பிடும் ஏசு மதத்தார்