பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இனிச் சமயத்தைப்பற்றிக் காந்தியடிகள் கூறியுள்ள பொன்மொழிகள் சிலவற்றைக் காண்போம்:

‘சமயம் சமயம் என்று எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். சமயத்தின் பெயரால் செய்யப்படும் கொடுமைகளை ஏலேன். பண்டை நூல்கள் தெய்விகமானவைகளே. ஆனாலும் அவைகளிலுள்ள பொருள்கள் என்னறிவிற்குப் பொருந்தியனவாயிருத்தல் வேண்டும். இல்லையேல், நூல்களின் கடவுட்டன்மையையும் நான் மறுப்பேன்.’

‘சமயமென்றால் எது சமயம்? கரவும், மூடபக்தியும், கண்மூடி வழக்கமுங் கொண்டது சமய மன்று.’

‘உயிரை, சம்பத்தை, வாணிகத்தை, குடும்பத்தை, உடலை எதையும் பொருளாக மதித்தல் கூடாது. சத்தியாக்கிரகம் மனித உரிமையைப் பற்றிய போர். ஆதலால் இது சமயப் போராகிறது. மனச்சான்றுரிமை குறித்துப் போராடுவது சமயப் போராகவே இருத்தல் வேண்டும்.’

‘எல்லா உலகங்கட்கும் பொதுவாயிருப்பது ஒன்று. அஃது எங்கும் நீக்கமற நிறைந்தது. அது சத்தியப் பொருள். அதை நேராகக் காண விரும்பும் ஒருவர் என் செய்தல் வேண்டும் ? அவன் படைப்பில் இழிந்த ஒன்றையும் தன்னைப்போல் நேசித்தல் வேண்டும். சத்தியத்தில் எனக்கு அளவிலா அன்பு உண்டு. அவ்வன்பு என்னை அரசி