பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர

வணக்கம். மகிழ்ச்சிக்குரிய காட்சியோடு இந்த நூலில் புகுவீர்கள். திருவள்ளுவர் வாழ்த்துகிருர் , மண மக்கள் மகிழ்கின்றனர். தொடர்கின்ற அவர்களது உரையாடல் உங்களை உடன் அழைத்துச் செல்லும். அக் காட்சி கற்பனையேயாயினும் அடிப்படை உண்மை கொண்டதென்பதை உள்ளத்தின் ஒரு மூலை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

உரத்த குரலில் பேசுவதுபோல் தடித்த எழுத்தில் அமைந்த பகுதிகள் உங்களுடன் பேசும். அங்கங்கே அமைந்த உடுக்குறி உங்களைக் கீழே அழைத்துச் சென்று உரிய குறளைக் காட்டும். குறளில் இட்டுக் காட்டப்பட்டுள்ள நிறுத்துக் குறிகள் பொருள் தெளி வோடு பயிலத் துணை புரியும். யாப்பு சிதையாமல் வரை யறுக்கப்பட்ட சீர்கள் ஒசைத் தெளிவோடு படிக்கச் செய் யும். மீண்டும் மேலே செல்வீர்கள்.

காமத்துப்பாலின் முப்பத்தைந்து குறட்பாக்களால் பின்னப்பட்ட வாழ்வாங்கு வாழ்க பகுதியை இன்பத் தினவோடு கடப்பீர்கள். தொடர்ந்து இல்லற இயலின் இருபது அதிகாரங்கள் ஏற்ற தலைப்புக்களுடன் அடுத் தடுத்து உங்களை உணர்வோடு வரவேற்கும். இருநூற்று நாற்பத்து நான்கு குறட்பாக்களின் தெளிவான கருத் தைப் பெற்றவர்களாய் நீங்கள் நூலினின்றும் வெளி யேறுவதை எண்ணி நான் மகிழலாம் என்று நம்பு கிறேன்.

நூலின் கருத்தோட்டத்தைக் காட்டிவிட்டேனயினும் மேலும் ஒரு செய்தி குறிக்கிறேன். பண்பட்ட வாழ்வியல்