பக்கம்:வழிகாட்டி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டி 33

போது வழிகாட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகங் களை வெளியிடுகிறார்கள். தலங்களுக்குச் செல்லும் வழிகாட்டிகளாகப் பல புத்தகங்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் அந்த அந்த ஊருக்குப் போக எண்ணு பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். மற்றவர் களுக்கு அவ்வளவு உபயோகமாக இருக்கு மென்று சொல்ல முடியாது.

மேல்நாட்டினர் இலக்கியங்களைப் பிரித்து வைத்த முறையில், பிரயாண நூல்கள் என்ற ஒரு வகையை வகுத்திருக்கிறார்கள். ஒரு வகையில் அந்த நூல்களை மேலே சொன்ன வழிகாட்டிகளுக்கு இனமாகவே சொல்லலாம். ஆனால் அந்த நூல்களின் தலைமையான நோக்கம் வழிகாட்டுவது அல்ல. பிரயாணம் செய்த ஒருவர் தம்முடைய பிரயாண அநுபவத்தை இலக்கியச் சுவையோடு சொல்லும் நூல்கள் அவை. பிரயாணம் செய்தவர்கள் தம் உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சி களையும், தாம் பெற்ற அநுபவங்களையும், அவற் றோடு சம்பந்தமுள்ள பல செய்திகளையும் அவற்றில் எழுதியிருப்பார்கள். அவை படிக்கப் படிக்க இன்பம் தருவனவாக இருக்கும்.

நம்முடைய நாட்டில் உரைநடை நூல்கள் மிகுதி யாக வரும் இக்காலத்தில் சிலர் பிரயாண நூல்கள் எழுதி வருகிறார்கள். பிரயாணத்தை நன்றாக அநுபவித்தால் தான் சுவையான செய்திகளைச் சொல்ல வாய்ப்பு இருக் கும். அதற்கு அமைதியான பிரயாணமும் எல்லாவற்றை யும் கூர்ந்து பார்க்கும் உள்ளப்பாங்கும் வேண்டும். இந்தக் காலத்தில் பிரயாணங்களெல்லாம் வெகு வேக மாக நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான மைல்கள் ഖ.ു.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/35&oldid=643590" இலிருந்து மீள்விக்கப்பட்டது