பக்கம்:வழிகாட்டி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வழிகாட்டி

டிருக்கிறாய். நலத்தை விளைக்கும் கொள்கையோடு நீ உனக்குரிய இடத்தைவிட்டு நீங்கும் பிரயாணத்தை விரும்பியிருக்கிறாய். இதுகாறும் நீ அகங்கார மமகாரம் மூடிய பிரதேசத்திலே ஊடாடி உலவினாய். அந்த ஆணவப் பரப்பை விட்டுவிட இப்போது துணிந்துவிட் டாய். உன் உள்ளம் முருகனைத் தியானிக்கிறது. உன் சங்கற்பமே நன்மை புரிவதாக இருக்கிறது. ஆதலால் நிச்சயமாக உன்னுடைய நல்ல மனசிலே நினைத்திருக் கும் இனிய விருப்பங்கள் பலவும் ஒருங்கே நிறைவேறும். நீ நினைத்த காரியம் இதோ இந்தக் கணத்திலே கைகூடப் பெறுவாய். முருகன் அருளாகிய பேறு உனக்குக் கிடைக்கும்.

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவுநீ நயத்தினை ஆயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே. (சிவந்த திருவடியிடம் செல்லும் பெருமையையுடைய உள்ளத்தோடு நன்மையைச் செய்கின்ற சங்கற்பத்தைக் கொண்டு உன் நாட்டைப் பிரிந்து தங்குவதற்குரிய பிரயாணத்தை நீ விரும்பினாயானால், நல்ல நெஞ்சில் எண்ணிய இனிய விருப்பங்கள் யாவும் ஒருங்கே நிறை வேற, நீ நினைத்த காரியம் இப்போதே கைகூடப் பெறுவாய்.

செம்மல் - செய்ய வேண்டியதைச் செய்து முடித்த பெருமை. கொள்கை-சங்கற்பம், விரதம். புலம்-தேசம், இடம். உடன்-ஒருங்கே. நன்னர்-நன்மை. நசைவிருப்பம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/76&oldid=643649" இலிருந்து மீள்விக்கப்பட்டது