உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 101 கள் நியமனம் என்கிற கொள்கையை அழுத்தந்திருத்தமாக கடைப் பிடித்து, ஏற்கெனவே இருந்த ஊழல் முறைக்கு பிரயாணச் சீட்டுக் கொடுத்து அனுப்பி விட்டு இன்றைக்கு நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற அளவுக்கு கிட்டத்தட்ட முதற்கட்டமாக சென்ற ஆண்டு 13,140 இடைநிலை ஆசிரியர் பணி உங்கள் வீட்டின் கதவைத் தட்டி உங்களுக்கு வழங்கப்பட்டது என்பதை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள். அதைப்போல இந்த ஆண்டிலும், அதே முறையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமைப்படி 10,384 இடைநிலை ஆசிரியர் பணிகள் இன்றைக்கு வழங்கப்பட்டு வருகின்றன ஐந்தாண்டுக் கால ஆட்சியில் - கடந்த காலத்தை நினைவூட்ட நான் விரும்பவில்லை - இருந்தாலும் வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. உங்களில் பலபேர் வரலாற்றைப் போதிக்கின்ற ஆசிரி யர்கள் இருக்கிறீர்கள். எனவே, பழைய சரித்திரங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். க்கன் கடந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியில் - ஐந்தாண்டு முடிவடை கின்ற நேரத்தில் - 8,450 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத்திரம் தான் வேலை தரப்பட்டது. அதுவும் வேலைவாய்ப்பு அலுவலகத் திலே பதிவு செய்து கொண்ட முன்னுரிமை அடிப்படையிலே அல்ல. அது வேறு முன்னுரிமையின்படி. (பலத்த சிரிப்பு) அது என்ன முன்னுரிமை என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ம ஆனால், 96,97இல் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும் இடம் இல்லாமல் 23,524 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் பெருமிதத்தோடு இங்கே தெரிவித்துக் கொள்வேன். அது மாத்திரமல்ல; காலியாக இருந்த பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு