பக்கம்:வழுக்கு நிலம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ( ரா. சீனிவாசன் காலி செய்யாமல் இருக்க வேண்டுமானால் நீ கட்டாயம் தேவை. நானே உனக்கு எழுதலாம் என்று இருந்தேன்." அவள் செவிகளை அவளால் நம்ப முடியவில்லை. "ஏன்! நான்தான் உங்களுக்குப் பணம் கொண்டுவர முடியாதே." "பணம் எனக்கு இப்பொழுது தேவையில்லை. அடுத்த அறையைத்திற! அதுதான் உன் சமையல் அறை. இது தான் நம் வீடு. இந்த இடம் போதும். இந்த வீட்டுக்காரர் ரொம்பவும் நல்லவர். இந்த இடத்திலேயே நம் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாக் காலத்தையும் அமைத்து விடலாம்." இனி, அவரிடம் என்ன பேசுவது என்று அவளுக்குத் தோன்றவில்லை. எதிர்பாராதவிதமாய்க் கிடைத்த இந்த அன்பு வரவேற்பு அவளைத் திகைக்கசச் செய்தது. "நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டது அவ்வளவும்.” "ஓரளவு மெய். கண்ணால் காண்பது காட்சி. காதால் கேட்பது கேள்வி. நெருங்கிப் பழகினால்தான் உண்மை தெரியும்.” "அப்படியானால் உங்களை இதுவரை ஆட்டிப் படைத்த மோகினித் தெய்வம்...?" "அதோ!" என்று சொல்லிப் பெட்டியிலிருந்த குதிரைப் பந்தய குறிப்புப் புத்தகங்களை எடுத்து வெளியே போட்டான். இந்த நண்பர்களோடு ஆடும் சீட்டாட்டத்திற்குத்தான் அப்பொழுதெல்லாம் இரவில் உன்னைப் பிரிந்து சென்றது. வாழ்க்கையை ஒரு சூதாட்டமாகக் கருதினேன். உன் திருமணத்தையும் ஒரு சூதாட்டமாகக் கருதினேன். என் வாழ்வே ஒரு சூதாட்டம். நீ அதில் வைக்கப்படுகின்ற காயாக அமைந்தாய்.” அவளைப் பிரிந்து அவன் சென்ற கடந்த காலத்தின் சில இரவுகள் அவள் கவனத்திற்கு வந்தன. தன்னிடம் அவர் கேட்ட பொன் சரடும், அதைக் கழற்றிக் கொடுத்த காட்சியும் கவனத்திற்கு வந்தன. இருந்தாலும் மாணிக்கம் சொன்ன மோகினித் தெய்வம் யார்? கீழே வீட்டுக்கார அம்மாள் அறிமுகப்படுத்திய சினிமா நட்சத்திரம் யாராக இருக்கக் கூடும்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளை அமைதி கொள்ளாமல் தடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/172&oldid=898142" இலிருந்து மீள்விக்கப்பட்டது