பக்கம்:வழுக்கு நிலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ரா. சீனிவாசன் பக்கம் தூக்கிக்கொண்டிருந்தது. இமாலயா என்று போட்டிருந்த வெள்ளை நிறப் புட்டியிலிருந்து ஸ்நோ எடுத்துப் பூசிக் கொண்டிருந்தான். முகப்பரு வந்த இடத்தின் வடுவை மறைக்கச் சிறிது தேய்த்துக்கொண்டிருந்தான். பார்வதி தன் வேலையில் கவனம் செலுத்தினாலும் தன் பார்வையை அவன்மீது செலுத்தாமலில்லை. கண்ணிறைந்த தன் கணவனின் அழகை உவகையோடு கண்டு மகிழ்ந்தாள். முன்னாலெல்லாம் ஆபீசுக்குப் போகும் போது "பாரு! இங்கு வா!" என்று கூறி அன்போடு அணைத்துக்கொள்ளும் அவன் கரங்கள் இப்பொழுது 'டையைச் சரிப்படுத்துவதிலேயே இருந்தன. உள்ளே அறையில் பழம்பானையில் இருந்த அரிசியை ஆழாக்கில் அளந்து போட்டுக்கொண்டு மறுபடியும் சமையலறைக்குத் திரும்பினாள். சிவராமன் வெளியே சென்ற போது நடந்த பூட்சு சப்தம் கேட்டது. "அக்கா! வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்ற அவன் இறுதிச் சொற்களும் காதில் விழுந்தன. அவன் தமக்கை அரிந்து வைத்த முள்ளங்கிகளை அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பருப்புச் சட்டியில் போட்டாள். "பார்வதி.! உன் அண்ணன் படித்துக்கொண்டிருந்தானே பாஸ் ஆகி விட்டானா?” - 'பரீட்சை எழுதியிருக்கிறார். அநேகமாகப் பாஸ் செய்து விடுவேன் என்றுதான் சொல்கிறார்." "அவன் திருமண விஷயத்தைப் பற்றி அப்பா என்ன சொல்கிறார்?" "செங்கல்பட்டில் பெரிய மிராசுதார் மகளாம். நிறையச் சொத்து இருக்கிறது." "ஒரே மகள் என்று சொல்லு." "ஆமாம். அப்படித்தான் சொல்லுகிறார்கள். அவள் பத்தாவது மூன்று முறை எழுதியும் பாஸ் ஆகவில்லையாம். இல்லாவிட்டால் மேல்படிப்புப் படிக்க வைத்திருப்பார்கள். அவள் அப்பா இன்னும் ஒருமுறை எழுதிவிடு என்று வற்புறுத்துகிறாராம்." "ஆமாம், முயற்சி செய்தால் பாஸ் செய்துவிடலாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/18&oldid=898148" இலிருந்து மீள்விக்கப்பட்டது