பக்கம்:வழுக்கு நிலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ரா. சீனிவாசன் 3 சிவராமன் வழக்கம் போல் நேரங்கழித்து வராமல் அன்று மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்தான். கையில் ஒரு பொட்டலம் இருந்தது. வரும்பொழுதே, "அக்கா!" என்ற குரலோடு வீட்டுக்குள் நுழைந்தான். தமக்கையும் தம்பியின் வருகையைக் கண்டு அவன் கையிலிருந்த பொட்டலத்தைக் கண்டாள். "என்னடா இது!" என்று கேட்ட வண்ணம் அதைக் கையில் வாங்கினாள். "உனக்காகத்தான் வாங்கி வந்திருக்கிறேன்.” அதை வாங்கி வைத்துவிட்டு உள்ளே யிருந்து குவளையில் காப்பி கொண்டுவந்து கொடுத்தாள். அதை வாங்கிக் குடித்தான். "உனக்காகத்தான் வாங்கி வந்தேன். பிடித்திருக்கிறதா - 33 LffTFT இப்பொழுது அவனைக் கண்டிக்க அவள்நா எழுந்தாலும் மனம் எழவில்லை. "சீக்கிரம் சமையல் செய்து வை. இன்று நல்ல சினிமாப் படம் ஒன்று வந்திருக்கிறது." "தமிழ்ப் படமா?" "ஆங்கிலப் படம். உனக்கு விளங்காது. இரண்டாவது ஆட்டம். நீ வர முடியாது." என்று சொல்லிக்கொண்டே அவன் உடுத்திருந்த ஆபீஸ் உடையைக் களைந்து எட்டு முழம் வேட்டி ஒன்றைக் கட்டிக்கொண்டு மெல்லிய உட்சட்டை ஒன்றைப் போட்டுக்கொண்டு கையில் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். அதில் எழுந்த புகை, வளையம் வளையமாகச் சுற்றிச் சென்றுகொண்டிருந்தது. அந்த வளையமான புகையைப் போலவே அவன் எண்ணங்களும் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தன. "இந்தப் பழக்கத்தை யெல்லாம் விட்டுவிடக் கூடாதா? எல்லாம் உன் அம்மா கொடுத்த செல்லம்தான். கேட்கும் பொழுதெல்லாம் மறுக்காமல் பணம் கொடுத்ததால்தான் இந்த மாதிரிப் பழக்கங்கள் எல்லாம் செய்துகொண்டாய். உங்கள் அத்தானிடம் ஒரு சின்ன பொடி போடுகிறதைக் கூட நீ பார்க்க முடியாது" என்று சொல்லிக்கொண்டே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/22&oldid=898156" இலிருந்து மீள்விக்கப்பட்டது