பக்கம்:வழுக்கு நிலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 21 குடித்து வைத்த குவளையை எடுத்து வைத்து அடுப்பங் கரைக்குச் சென்று சமையல் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள். "அந்த வீட்டில் தனக்கு என்று ஏதேனும் வேலை இருக்கிறதா?” என்று எண்ணிய வண்ணம் பார்வதி ஆழ்ந்த சிந்தித்துக்கொண்டிருந்தாள். நேற்றைய தினம் "வீட்டை விட்டுப் போ” என்று சீற்றத்தோடு பேசிய சொற்கள் என்னவோ மேலானதாக இருப்பதைப்போல உணர ஆரம்பித்தாள். அவன் தமக்கை, வீட்டு விளக்குகளை யெல்லாம் துடைத்து எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தாள். "இந்த வீட்டிற்கு மின்சாரம் போடக்கூடாதா! அப்பா கட்டி முடித்ததோடு சரி. அதற்கப்புறம் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாய்" என்று சொல்லிக்கொண்டே அவற்றை ஒருபுறம் வைததாள. "பார்வதி : விளக்கு வைக்கப் போகிறது. வீடு பெருக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய். ஒ! நாவல் படிக்கிறாயா!' என்று உரத்துப் பேசத் தொடங்கினாள். "நாவலா! என் வாழ்வைவிட அவ்வளவு சுவை அதில் இருக்குமா?" என்று சொல்ல வந்தவள் வாய் திறவாமல் இருந்து விட்டாள். வீடு பெருக்கும் தொழிலாவது கிடைத்ததே என்று கொஞ்சம் திருப்தி கொண்டாள். கையில் துடைப்பம் எடுத்துக் கொண்டு போட்டிருந்த பாயைச் சுருட்டி 'நல்லிரவு'தலையணையை உள்ளறையில் கொண்டுபோய் வைத்தாள். உள்ளறையைப் பெருக்கிவிட்டுக் கூடத்திற்கு வந்தாள். அவள் கட்டியிருந்த பச்சைப்புடவை அவள் மாநிறத்திற்கு அழகு கொடுத்தது. என்றாலும், சிவராமனின் கண்கள் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் கையிலிருந்த சிகரெட்டு முனையை ஒரு தட்டுத் தட்டிவிட்டு வாயில் வைத்து ஓர் இழுப்பு இழுத்தான். அவன் விட்ட புகை மறுபடியும் வளைந்து வளைந்து சென்று மறைந்தது. சட்டை ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டான். 'வெளியே போய் வருகிறேன். சமையல் சீக்கிரம் ஆகட்டும்.” சிவராமன் வெளியே போனதும் சிகரெட்டுச் சாம்பலை யெல்லாம் சீராகப் பெருக்கி யெடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/23&oldid=898158" இலிருந்து மீள்விக்கப்பட்டது