பக்கம்:வழுக்கு நிலம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 55 அண்ணியின் மெல்லடிகள் வந்து கால் வைப்பது போலவும் திருமகள் வந்து குடிபுகுவது போலவும் அவள் உள்ளம் எண்ணத் தொடங்கியது. அண்ணியின் அழகான திருவுரு வத்தை அவள் நெஞ்சில் ஒவியமாகத் திட்டத் தொடங்கினாள். இனி அவள் அண்ணன், அண்ணியின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும் காட்சி, நேரங் கழித்து வீடு திரும்பும் தன் அண்ணன் சீக்கிரம் வீடு திரும்புவதும், புத்தகங்களோடு விளங்கும் தன் அண்ணன் இனி அந்தப் புத்தகங்களுக்கு விடுமுறை கொடுத்து வாழ்வை நேரில் உணரும் அந்த அறிவு மிக்க வாழ்வும் ஆகிய இவற்றையெல்லாம் எண்ணி மகிழ்ந்தான். வீடே இனி மங்கலமாக விளங்கப் போகிற அந்த இன்பக் காட்சியை அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. "அம்மா! இந்தப் பெண்களே பொல்லாதவர்கள். அப்பா! எனக்குத் திருமணமே வேண்டாம்" என்று சில சமயங்களில் பேசிவந்த அண்ணன் எப்படி மாறுவான் என்று எண்ணுவதில் அவளுக்கு ஒருவகை திருப்தி இருந்தது. "அப்பா! அண்ணி கருப்பா, சிகப்பா?” "அதைக் கேட்க மறந்து விட்டேன். அதை எல்லாம் நீயே பார்த்துத் தெரிந்து கொள்ளேன். இதெல்லாமா எனக்கு வேலை! ஏதோ நல்ல இடமா, பையன் முன்னுக்கு வர முடியுமா, அதற்குத் தகுந்த இடமா ! இது தானேம்மா முக்கியம்.” அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் பார்வதி திகைத்தாள். அதற்குள் கையில் புதிய வாரப்பத்திரிகை ஒன்றை ஏந்தியவனாய் வீட்டுக்குள் நுழைந்தான் அவள் அண்ணன். விரைவாகச் சென்று அதைப் பார்க்க முன் வந்தாள். முற்றத்திலேயே அவனைச் சந்தித்தாள். “என்ன புத்தகம் அண்ணா? அது.” 'உனக்கு விளங்காதம்மா. சினிமா விசிறி' என்று சொல்லுவார்கள் "சரிதான். ஒரு விஷயமும் சுவாரஸ்யமாகக் கிடைக்கா விட்டால் இந்த சினிமா நடிகர்களுடைய வாழ்க்கை வரலாறு, நடிப்பு வகைகள், அவர்களின் விருப்பு வெறுப்புகள் இதையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/57&oldid=898231" இலிருந்து மீள்விக்கப்பட்டது