பக்கம்:வழுக்கு நிலம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 , ரா. சீனிவாசன் குற்றம் செய்தவர் எதிர்பார்த்தபடி தூக்குத் தண்டனை கிடைத்தால் எந்த நிலைமையை அடைவார்களோ அந்த நிலைமையை அடைந்தவனைப் போல அவன்முகம் வெளுத்து விட்டது. நெற்றியில் சில வியர்வைத் துளிகள் துளிர்க்க ஆரம்பித்தன. போட்டிருந்த உட்சட்டை நனைந்ததைப் போன்ற உணர்வு அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. பியூன் அவர் கொடுத்தனுப்பிய விசிடிங் கார்டைக் கொடுத்தான். அதை நிதானமாக உற்றுப் பார்த்தான். அவனை யறியாமல் ஒரு பெருமூச்சு விட்டான். எதிரே அந்தப் பியூன் இல்லாதிருந்தால் அந்தப் பெருமூச்சோடு அப்பாடா என்ற சொல்லும் வாய்விட்டு வெளிவந்திருக்கும். மின் விசிறியின் காற்றுக் கொஞ்சம் சில்லென்றிருந்தது. நனைந்த வியர்வை உலர ஆரம்பித்தது. "வரச்சொல்' என்று கூறி அலமாரியில் இருந்த குறிப்பேடு ஒன்றை எடுத்து மேஜைமேல் வைத்தான். வெள்ளை ஜுப்பாய் அணிந்து தலையில் ஒரு தொப்பியோடு விளங்கிய பம்பாய் வியாபாரி ஒருவர் உள்ளே நுழைந்தார். பக்கத்தில் இருந்த சிறு நாற்காலியைச் சுட்டிக் காட்டி அதில் உட்காருமாறு அவரிடம் சொன்னான். அவர் புன்முறுவல் பூத்த வண்ணம் அந்த நாற்காலியில் அமர்ந்தார். "பாருங்கள்! உங்கள் ஏட்டைத்தான் எடுத்து வைத்திருக் கிறேன். இன்று சாயுங்காலம் மேனேஜர் கையெழுத்தாகித் தபாலில் அனுப்பி விடுவோம். கவலையில்லாமல் போகலாம்" என்று அமைதியாகச் சொன்னான். "வருகிறேன். நன்றி” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தினின்று எழுந்து அவர் போய்விட்டார். அவர் வெளியே போனதும் அந்தக் குறிப்பேட்டை எடுத்து அலமாரியில் வைத்தான். "எதற்கு இப்படி நடுங்கவேண்டும். என்ன தலையா போய் விடும். பார்த்துக் கொள்ளலாம். அவன் வட்டிக்குத் தானே கடன் கொடுத்தான். கேட்டால், இருந்தால் கொடுக்கப் போகிறேன், இல்லாவிட்டால் பிறகு தருவதாகச் சொன்னால் போகிறது” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு சிறிது தைரியம் கொண்டான். பிறகு மனத்தை ஒருவாறு தைரியஞ் செய்து கொண்டான். ஆபீஸ் குறிப்பேடுகளை எடுத்து வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்யத் தொடங்கினான். எப்படியும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/64&oldid=898248" இலிருந்து மீள்விக்கப்பட்டது