பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 தலேநோக்கா டென்றவுடன் ஒடோடி வந்து தலேதாங்க உடல்தாங்க ஆள்கோடி உண்டு; விலைகொடுத்து மேல்நாட்டு மருந்துகளே வாங்க மேலான மருத்துவரை நொடிப்பொழுதில் கூவச் செலவிற்குப் பணமுண்டு; யார் தந்த சொத்து ? திருடியுண்டு பிழைக்கின்ற ஆண்டைகளின் கூட்டம் கிலேகெட்டுப் போவதற்குப் பொதுவுடைமை வேண்டும் ! ஈதொன்றே போதாதோ ? நீசொல்லேன் தம்பி! 4