பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி காந்தியை மறவாதே ! - நமதருங் காந்தியை மறவாதே !. சாந்தம் அகிம்சை தன்னல மற்றசெய்கை ஏந்தி மக்களுக்காக யாண்டும் உழைத்த செம்மல் ! சட்ட மறுப்புச் செய்து தடியடி உடலில் தாங்கிக் கட்டுண்டு கிடந்த மக்கள் கால்கை விலங்கொடித்த குண்டு மருந்து மின்றிக் கூரிய வாளு மின்றிச் சண்டை சிறிது மின்றி விடுதலே வாங்கித் தந்த உதைபட்டுச் சிறைப்பட்டு உண்ணு விரதமேற்று வதைபட்ட மக்கள்மீள விடுதலே வாங்கித் தந்த கோடரிக் காம்பு கோட்சே கொலேசெய்த போதும் தோன்றல் தேடிய தெல்லாம் நாடு - சிறப்புறும் வழியே வாழ்க ! காந்தி காந்தி காந்தி காந்தி காந்தி