பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாரு என்னுயிர் நாடு என் தமிழ் நாடு என்றவு டன் தோள் உயர்ந்திடும் பாடு ! அன்னேயும் அன்னேயும் அன்னேயும் வாழ்ந்த அழகிய நாடு அறத்தமிழ் நாடு...! தன்னிக ரில்லாக் காவிரி நாடு ! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு ! முன்னவர் ஆய்ந்த கலேசெறி நாடு ! மூத்து விளியா மறவரின் நாடு ! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலேகடல் தாண்டி வழங்கிய நாடு ! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயின்ற திங் நாடு ! ஒர்குழு வாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிக் நாடு ! கார்முகில்,துவமும் கவின்மிகு நாடு ! கடும்புலிப் பொம்மன் கருவுற்ற நாடு ! பாரினில் தொன்மை வாய்ந்ததிந் நாடு ! பலபல துறையில் சிறந்ததிக் நாடு ! ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு ! ஆடலும் பாடலும் வளர்த்ததிங் நாடு சீரிய பண்பு நிறைந்ததிந் நாடு ! செந்தமிழ் மொழிவளன் செறிந்ததிக் 5ாடு ! ஒரடி வெம்பட உயிர்விட்ட நாடு ! ஒடுங்கியே பூனேபோல் இருப்பது கேடு ! 9 -