பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காதலின் மின்னல் உன்னில் கலந்திடு முன்னம் நீயோ வேதனே அறியா உள்ள விருவிருப் போடே வந்தாய் ; சாதலென் சொல்லேக் கேட்டுத் தாங்கொணு வெறுப்புக் கொண்டாய் ; தீதினை அறியா உன்னத் தீய்த்ததக் காதற் lயே ! ஒவ்வொரு நாளும் அந்த உணர்ச்சியில் குன்றிக் குன்றிச் செவ்விதழ் வண்ணம் மாறச் சிரிப்பெலாம் எங்கோ தள்ளிக் கவ்வையால் செடியில் நீயோ காய்ந்தனே ! உன்னைப் போல ஒவ்வொரு நாளும் ஊரில் உருக்குலே வாரும் உண்டே !