பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்ப்புதுவை கடற்கரையில் நீள்தாழை கரையோரம் புன்னைமலர் இடமகன்ற சீர்ப்புதுவை வாருங்கள்!-தமிழ் இன்கவிகள் பிறந்தவிடம் பாருங்க்ள்! r t கல்லாதார் இல்லாத கவின்மிகுந்த சீர்ப்புதுவை வல்லோர்கள் வாழுமிடம் வாருங்கள்!-இருள் . மனமாசைப் போக்குமிடம் பாருங்கள்! - 2 மேல்நாட்டுக் கலைவிளக்கம் விளங்கவைக்கும் சாலைகளும் . தாலாட்டுக் கடற்கரையும் பாருங்கள்!-மேலைத் தமிழறிஞர் மொழிபெயர்ப்பைக் கேளுங்கள்! 3. மருத்துவம்செய் நீள்மனைகள் மாமுனிவன் தன்வந்திரி கருத்துரைக்கும் பல்லோரைக் கேளுங்கள்!-அவர் r காட்டுகின்ற வழிநடந்து பாருங்கள்! - 4 காவேந்து தென்னைமரக் கடலோர வடதிசையில் - பாவேந்தர் கல்லறையில் குந்துங்கள்!- அவர் பாடிவைத்த படிகடக்க முந்துங்கள்! - 5 1971ஆம் ஆண்டு சனவரிக்கும் மார்ச்சுக்கும் இடையே எழுதப்பட்டது.