பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்செனப்படுவது கினதே இவரியா ரென்குவையாயின், இவரே தொண்டைகன் னாட்டின் துறைதொறும் கலங்கள் கிறைத் துப் பொருளை நிறைத்துப் புகழைத் தமிழக மிருந்தே தடங்கடல் தாண்டி - உலகுக் களித்த ஒப்பிலாப் பல்லவர் ஆண்ட காஞ்சி அளித்த அண்ணா! தென்னக முதல்வர்! என்னகத் தலைவர்! உலகம் வியக்கும் ஒப்பிலா அறிஞர்! பிறர்வாய் அடக்கும் பேச்சிற் பெரும்புலி! வள்ளுவர் குறளின் உள்ளுறை பெரும்பொருள்! தம்பியர் கண்ட தானைத் தலைவர் வரியைக் குறைத்து வறுமை குறைத்து நெறியோ டாண்ட நீள் புகழ் மன்னர் வளர்த்த சங்கத் தமிழின் மாண்பை உலகத் தமிழர்க்(கு) குணர்த்திய செம்மல்! இனியர் எளியர் எவர்க்கும் என்றும்! செந்நெல் வயலும் செழுமலைக் காடும் புன்னை மணக்கும் நெய்தற் பொருளும் தன்னகம் கொண்ட தமிழக அரசை உலகம் புரக்கும் ஞாயிறை ஒப்பக் காக்கும் அண்ணா அமைச்சர் வாழியர்! இதுநாள் ஆண்ட அமைச்சருள் எல்லாம் அமைச்செனப் படுவது கினதே அத்தை! பூவிரி நீள்கரை வற்றாக் காவிரி போலக் காக்ககம் அரசே! திணை : பாடாண் துறை : இயன்மொழிவாழ்த்து. 1 0 15 20 25