பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்வருமுன்புே இராமராஜ்ஜியங் கண்ட கோமான்தயரதனின் கொள்கை தவப்பயனே இராமன் திருவுருவாய் இரவிகுலம் விளங்கியது சீமான் சிற்றடிமை சிறுமை ஆங்கில்லை. வம்பே பேசுகிற வாய்ச்சொல் வீரர்களின் துன்பப் போராட்டம் துயரம் ஆங்கில்லை சம்பளம் வாங்காத சேவகர் ஆங்குண்டு கிம்பளம் வாங்குகிற கிங்கரர் ஆங்கில்லை. உப்புக்கும் கூழுக்கும் உண்மையை விற்பதிலை எப்போதும் நல்லெண்ணம் எங்குமே நற்சங்கம் சப்பாணிச் சோணிகளை ஜெயவீர பீமன் என ஒப்பாரிக் கவிபாடும் அப்பாவிக் கூட்டமிலை. xxxiv